இந்த துன்பமயமான சூழலில் இந்தியா மக்களுக்கு உதவுங்கள். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கு இந்தியாவுடன் துணையாக நிற்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்த நாட்டில் வாழும் மக்கள் ட்விட்டர் மூலமாக கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி தனது கொடூர முகத்தை காட்டி வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதுடன், பல மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பல்வேறு இழப்புகளை நாடு எதிர் கொண்டுள்ளது.தலைநகர் டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 25 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் மூலம் இறந்துள்ளனர், மேலும் 60 நோயாளிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறைந்த ஆக்சிஜன் அழுத்தமே இறப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது
இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்கு இந்தியாவுடன் துணையாக நிற்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அந்த நாட்டில் வாழும் மக்கள் ட்விட்டர் மூலமாக கோரிக்கை வைத்துள்ளனர்.